கூரிருள் மறைந்திடும் குளிர்வது குறைந்திடும் குறுகிப் படுத்திடல் இனிவேண்டா! 3 பேரருள் சுரந்திடும் பெருவழி திறந்திடும் பேதமை விடுவாய் தமிழ்மகனே! 4 திருட்டுகள் நீங்கிடும் தீயன நடுங்கிடும் தீனர்க்கு அபயக்குரல் சங்கோசை! 5 இருட்டினில் செய்திடும் யாவையும் மறைந்திடும் எழுந்து கடன்முடி தமிழ்மகனே! 6 சூதரும் குடியரும் சுருக்கெனப் பயப்படும் சுதந்தரச் சங்கொலி கேட்குதடா! 7 வேதமும் கலைகளும் வித்தைகள் விளங்கிட விடிந்திடும் சஞ்சலம் விட்டிடுவாய்! 8 மங்களச் சங்கொலி மகிழ்தரக் கேட்குது மயக்கவிட்(டு) எழுந்துஇனி மறைபாடு! 9 எங்ஙணும் யாவினும் இருந்தருள் கடவுளும் இருக்குது பயமிலை எழுந்திரடா! 10 குறிப்புரை:-தீனர் - யாசிப்பவர், இரப்போர். ‘இரந்து உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக இவ்வுலகு இயற்றியான்‘ என்று வள்ளுவப் பெருந்தகையார் கூறிப் போந்துள்ளார். ‘தனியொருவனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்கின்றார் பாரதியார்; சூதர் - சூதாடுவார்; வித்தை - கல்வி; கூரிருள் - செறிந்த இருள். 234. இணையிலாக் கொடி இந்திய நாட்டில் இணையிலாக் கொடியே இலங்குவாய் என்றும் வயங்கொலி பரப்பி தந்திரம் மோசம் தன்னலம் கருதா சத்தியம் நிறைந்த உத்தம வாழ்வின் |