புலவர் சிவ. கன்னியப்பன் 383

உயிருள்ளஉடலங்கள் எல்லாம் - ஈசன்
       உறைவுஎன்று பணிகின்ற நல்லோன்
துயருற்ற எவருக்கும் துணையாம் - காந்தி
       தொடர்புஇன்றி எதுவாழ்வின் புணையாம்.       3

வையத்தை வாழ்விக்க வந்தான் - மக்கள்
       வானத்தின் சக்திபெறத் தந்தான்
தெய்வத்தின் பெயர்தியாக ராசன் - என்று
       தெரிவிக்க உயிர்தந்த நேசன்.       4

பகவானைத்தரிசிக்க என்று - நாமும்
       பலவான ஊர்தேடிச் சென்று
மிகவாக வாடுதல் வேண்டாம் - காந்தி
       மெய்வாழ்வு பாடுதல் பூண்டால்.       5

தானங்கள்வெவ்வேறு செய்து - நல்ல
       தவமென்றே ஆகுதி பெய்து
மோனங்கள் தருகின்ற யாவும் - காந்தி
       முறைதந்த வழிவாழ மேவும்.       6

குறிப்புரை:-இணையற்ற - ஒப்பில்லாத; மெய்ஞ்ஞானம் -
உண்மை அறிவு; பகவான் -இறைவன்; வாடுதல் - தளர்வுறுதல்;
ஆகுதி - வேள்வி; வையம் - உலகம்.

240. கடவுளைக் காட்டும்காந்தி

ஒப்புடன் ‘உண்மைக் காக
உயிர்தர வேண்டும்என்றே
எப்படி விரும்பி‘னாரோ
அப்படி இறந்தார்காந்தி.
இப்படி உயிரை ஈந்தோர்
உலகினில் எவரும்இல்லை
தப்புற நினைக்க வேண்டாம்
தர்க்கமும் தருமம்அல்ல. 1