கூச்சம் அற்ற பக்தியும் குணந லத்தின் சக்தியும் தேர்ச்சி கொள்ளும் கருணையே காந்தி வாழ்ந்த அருள்நெறி. 3வீரம் பேசும் வெறியரும் வெற்றி நாடும் குறியரும் ஈரம் அற்ற நெஞ்சரும் இழிவு கற்ற வஞ்சரும் ஓரம் சொல்லு வோர்களும் உண்மை அஞ்சும் பேர்களும் தூரம் ஓடக் காய்ந்திடும் தூய்மை சோதி காந்தியாம்! 4 குறிப்புரை:-ஐயன் - தலைவன்; மோனம் - மௌனம்; ஓரம் - ஒரு பக்கம். 242. இணையிலாஎம்மான் காந்தி பிறப்பினும் பெரியவர்பெம்மான் காந்தி இறப்பிலும் இணையிலர் எம்மான் காந்தி துறப்பிலும் நிகரிலர் தூயோன் காந்தி மறப்பதும் நமக்கது மாபெரும் பாவம். 1 அறிவினில்ஆழியன் அரும்பெரும் காந்தி நிறைகுண நலங்களில் நேரிலன் காந்தி குறிசொலும் அனுபவக் குன்றாம் காந்தி நெறிதரக் காந்தியின் நேர்எவர் உலகில். 2 மேழியின்சிறப்பினை மீட்டவர் காந்தி ஏழையின் பெருந்துணை எமதரும் காந்தி கோழையும் திடம்பெறக் கொடுத்தவர் காந்தி வாழிய காந்தியின் வழிகொடு வாழ்வோம். 3 |