புலவர் சிவ. கன்னியப்பன் 385

சூரியன்இறப்பான்; காணும்
       சந்திரன் சூன்ய மாவான்;
பாரொடு விண்ணில் மின்னப்
       பார்க்கிற யாவும் மாயும்.
நேரிய அறிவு கூறும்
       தெய்விக மெய்மை காட்ட
நேரிய காந்தி ஞானம்
       நிரந்தரம் நிலைத்து வாழும்.       6

குறிப்புரை:-ஏம்பல் - ஏக்கம் அடைதல், கலங்கல், வருத்தம்.

241.தூய்மை சோதி

நீறு பூசு வோர்களும்
       நெற்றி நாமப் பேர்களும்
வேறு பொட்டு சந்தனம்
       வேண்டு கின்ற மைந்தரும்
கூறும் சின்னம் இன்றியும்
       கொள்கை யோடு நின்றிடும்
மாறு கொள்ளும் யாவரும்
       மகிழும் காந்தி தேவராம்.       1

அமிழ்தம்ஒத்த அறிவினில்
       அழிவி லாத நெறிதரும்
தமிழ்அ றிந்த சத்தியம்
       காந்தி வாழ்ந்த தத்துவம்
தமைய றிந்த முனிவரும்
       தம்ம டங்கும் அனைவரும்
அமைதி தேடும் சாந்தியே
       ஐயன் எங்கள் காந்தியாம்.       2

மூச்சுஅடக்கும் யோகமும்
       முறைபு ரிந்த யாகமும்,
பேச்சுஅ டக்கும் மோனமும்
       பேசும் தர்க்க ஞானமும்,

13நா.க.பா. பூ.வெ. எ. 489