யுத்தம் வருமோ எனஒடுங்கி ஒவ்வொரு நாடும் மனநடுங்கிச் சித்தம் திகைக்கிற இப்போதில் சிறப்புறும் காந்தியின் மெய்ப்போதம். 6 அன்னிய அறிஞர்கள் அனைவருமே ஆசையின் காந்தியை நினைவுறநீ என்ன பயித்தியம் உன்றனக்கே ஏன்பிற நினைப்புகள் இந்தியனே! 7 சாந்தியை அறிந்தது நம்நாடு! சத்தியம் காத்தது நம்நாடு! காந்தியைத் தந்தது நம்நாடு! கருணையின் வழியே நீர்நாடு! 8 245. உத்தமன் காந்தி உள்ளம் உருகுது கள்ளம் கருகுது உத்தமன் காந்தியை நினைத்துவிட்டால் வெள்ளம் பெருகிடக் கண்ணீர் வருகுது வேர்க்குது இன்பம் தேக்குதடா! 1 சித்தம் குளிர்ந்துள பித்தம் வெளிந்திடும் சீரியன் காந்தியின் பேர்சொன்னால் புத்தம் புதியன முற்றும் இனியன பொங்கிடும் உணர்ச்சிகள் எங்கிருந்தோ! 2 கிளர்ச்சிகொண் டான்மா பளிச்சென மின்னுது கிழவன் காந்தியின் பழமை சொன்னால்! தளர்ச்சிகள் நீங்கிய வளர்ச்சியில் ஓங்கிய தாட்டிகம் உடலில் கூட்டுதடா! 3 சோற்றையும் வெறுக்குது காற்றையும் மறக்குது சுத்தனக் காந்தியின் சக்திசொன்னால்! கூற்றையும் வெருட்டிடும் ஆற்றலைத் திரட்டிடக் கூடுத டாமனம் தேடுதடா! 4 |