தெய்வம்என்று உலகம் நித்தம் தேடு கின்ற ஒன்றுதான் வைய கத்தில் ‘அன்பு‘ என்ற வார்த்தை யாக நின்றதே! ஐயன் எங்கள் காந்தி வாழ்க்கை அற்பு தத்தை நாடினால் மெய்யு ணர்ந்தே அன்பு சொல்லும் மேன்மை யாவும்கூடுவோம். 7 குறிப்புரை:- சனித்த - பிறந்த; தாரணி - உலகம். 244. எவர் சாதித்தார்? கருணையின் பெருமையைப் போதித்தார் காந்தியைப் போல்எவர் சாதித்தார்? மரணமும் அவரிடம் அன்புபெறும் மற்றது எதுதான் துன்பமுறும்? 1 சத்திய நெறிதரும் சாந்திரமாம் சாத்விக வாழ்க்கையின் சூத்திரமாம் உத்தமன்காந்தியை மறந்துவிடின் உண்மைச் சுதந்தரம் மறைந்துவிடும். 2 புலையும் கொலையும் புரியாமல் புண்ணிய எண்ணம் புரியாமல் உலகம் இதுவரை கண்டறியா உயர்வழி விடுதலை கொண்டுவந்தான். 3 அணுகுண் டாலும் துன்பமுறா ஆன்ம பலத்துடன் அன்புதரும் இணைகண்டு அறியாச் சக்திதனை எம்மிடைப் புகுத்திய சிந்தன்இவன். 4 இந்திய நாட்டின் மெய்யறிவு இதுவெனக் காட்டிடும் ஐயன் இவன் நிந்தையும் புகழ்ச்சியும் கலைக்காத நிம்மதிக் கேஅவன் இலக்காவான். 5 |