அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும் அச்சம் அகற்றினது ஆர்? - உண்மை குடிகொண்டு கோபத்தைக் குறைவற நீங்கிய குணமுயர் காந்தியவர். 5 பேதையர்என்றுநாம் பேசிய பெண்களும் வீதியில் நம்மிலுமே - இங்கு நீதியில் லாமுறை அரசை எதிர்த்துடன் நின்றிடக் காந்தி செய்தார். 6 சின்னஞ்சிறியகுழந்தைக ளும்இன்று செயசெய வென்றுசொல்லி - எங்கும் நன்னெஞ்சு உருகிடத் தேசத்தி னைத்தொழக் காந்திஜி செய்துவிட்டார். 7 தீண்டப்படாதுஎன்று மனிதரைச் சொல்வது தீமையில் தீமையென்றே - அதைப் பூண்டொடும் போக்கநாம் விரதம் புனைந்தது புண்ணியர் காந்தியினால். 8 ‘தன்னைவதைப்பவர் தங்களுக்கும் அன்பைத் தாங்குவ தேதவமாம்‘- என்று முன்னைஇந் நாட்டினில் சொன்னவர் சொற்களை முற்றுவித் தார்காந்தியார்.9 ‘உடலினும்உயிரினும் உள்ளிருக் கும்ஒன்(று) உயர்ந்தது காணும்‘என்றே - இந்தக் கடலுல கத்தினில் கண்ணுக்கு முன்னாகக் காட்டிவிட் டார்காந்தியார்.10 காந்தியெனும்பெயர் சாந்தம் எனும் சொல்லின் காட்சியின் காட்சியென்றே - இனி மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி மங்களம் எய்திடுவார். 11 குறிப்புரை:-மாந்தர் - மக்கள்; வதைப்பவர் - வருத்துபவர். |