408நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அடிபட்டு மாளவும் சிறைபட்டு வாழவும்
       அச்சம் அகற்றினது ஆர்? - உண்மை
குடிகொண்டு கோபத்தைக் குறைவற நீங்கிய
       குணமுயர் காந்தியவர்.       5

பேதையர்என்றுநாம் பேசிய பெண்களும்
       வீதியில் நம்மிலுமே - இங்கு
நீதியில் லாமுறை அரசை எதிர்த்துடன்
       நின்றிடக் காந்தி செய்தார்.       6

சின்னஞ்சிறியகுழந்தைக ளும்இன்று
       செயசெய வென்றுசொல்லி - எங்கும்
நன்னெஞ்சு உருகிடத் தேசத்தி னைத்தொழக்
       காந்திஜி செய்துவிட்டார்.       7

தீண்டப்படாதுஎன்று மனிதரைச் சொல்வது
       தீமையில் தீமையென்றே - அதைப்
பூண்டொடும் போக்கநாம் விரதம் புனைந்தது
       புண்ணியர் காந்தியினால்.       8

‘தன்னைவதைப்பவர் தங்களுக்கும் அன்பைத்
தாங்குவ தேதவமாம்‘- என்று
முன்னைஇந் நாட்டினில் சொன்னவர் சொற்களை
முற்றுவித் தார்காந்தியார்.9

‘உடலினும்உயிரினும் உள்ளிருக் கும்ஒன்(று)
உயர்ந்தது காணும்‘என்றே - இந்தக்
கடலுல கத்தினில் கண்ணுக்கு முன்னாகக்
காட்டிவிட் டார்காந்தியார்.10

காந்தியெனும்பெயர் சாந்தம் எனும் சொல்லின்
       காட்சியின் காட்சியென்றே - இனி
மாந்தர்கள் எங்குமே ஏந்தி அதன்வழி
       மங்களம் எய்திடுவார்.       11

குறிப்புரை:-மாந்தர் - மக்கள்; வதைப்பவர் - வருத்துபவர்.