மாநிலத்துஅறிஞர் எல்லாம் வியந்துடன் மகிழ்ந்து வாழ்ந்த புரணியும் பொய்கள் கூட்டம் புகலிடம் தேடி ஓடப் புண்ணிய எண்ணம் நம்மைப் பிரிந்தவை புகுந்து கொள்ளக் கருணையின் பெருமை தன்னைக் கைக்கனி என்னக் காட்டு்ம் காந்தியின் பெருமை தன்னால் கடவுளின் பெருமை கண்டோம்! 5 252. தவமுனிகாந்தியவர் இந்திய நாடு சுதந்தரம்எய்தநல் தந்திரம் தந்தவர்யார்? - சிறு கந்தை ‘பக்கீர்‘என்று தந்துஒரு வன்சொன்ன காந்தி என்னும் பெரியார்.1 அஞ்சிக்கிடந்தநம் நெஞ்சத்து துணிந்திட ஆண்மை எழுப்பினது ஆர்? - ஒரு வஞ்சம் இலாதவர் வாய்மையின் தூய்மையின் வாழ்க்கையர் காந்தியவர். 2 ஆயுதம்இன்றியும் யாரும் வணங்கிடும் அன்பைப் பெருக்கினது ஆர்? - சற்றும் சாயுதல் செய்திடாச் சத்திய மூர்த்திநம் தவமுனி காந்தியவர். 3 நாட்டினுக்காஉயிர் கேட்பினும் தந்திட நான்என்று முன்வருவோர் - பலர் போட்டியிட் டேவர வீரம் புகுத்தினர் புண்ணியர் காந்தியவர். 4 |