தொல்லறத்தின்புதுப்பதிப்பே! தோல்வியிலாச் சால்புடையாய்! சொல்லுரைக்கப் போதாத சுசிகரமே! தொழுகின்றோம். 4 சாதிமதபேதமிலாச் சமதர்ம சந்நிதியே! நீதிநெறி பிசகாமல் நிறுத்(து) அளக்கும் துலாக்கோலே! வாதுபுரி வம்புகளின் வாயடக்கும் வல்லதையே! ஏதுபுகழ் சொல்லியுனை அஞ்சலிப்போம் எம்மானே! 5 வலிமைதரும்சூரியனே! வழிகாட்டும் தாரகையே! குலவவரும் சந்திரனே! குளிர்ச்சிதரும் பொன்காற்றே! புலமைதரும் பொன்மொழியே! புதுமைதரும் நன்மருந்தே! தலமறிந்த தனித்தலைவ! தாள்பணிந்தோம்; அஞ்சலித்தோம்! 6 மதிகலங்காமந்திரியே! மாசுபடாத் தந்திரியே! சுதிகலங்கா யாழிசையே! சுவைகுறையாச் சொல்லடுக்கே! நிதிமயக்கா மனநிறைவே! நிலைகலங்கா நிம்மதியே! கதிகலங்காச் சாரதியே! அஞ்சலித்தோம் காத்தருள்வாய். 7 தேடரியசெல்வமே! தெவிட்டாத தெள்ளமுதே! ஏடறியா ஞானமே! எழுத்தறியா வித்தகமே! |