மாந்தருக்குள் சமுக வாழ்வு மாறும் இந்தப் பொழுதிலே சோர்ந்தி டாமல் நமது நாட்டை துயில்எ ழுப்பும் ஓசையாம். 1 இடிஇடித்து மின்னல் மின்னி இருள் கவிந்தே எங்கணும் கிடுகிடுத்து உலகம் எங்கும் கிலிபி டித்த வேளையில் குடுகு டுத்த கிழவர் காந்தி குமரர் நாணக் கூவினார் துடிது டித்து உண்மை போற்றும் தொண்டர் யாரும் கூடுவோம். 2 வீடுபற்றி வேகும் போது வீணை மீட்டும் வீணர்போல் நாடு முற்றும் புதிய வாழ்வை நாடு கின்ற நாளிலே பாடு மிக்க சேவை விட்டுப் பதவி மோகம் பற்றினால் கேடு என்ற எச்ச ரிக்கை கிழவர் காந்தி கூக்குரல். 3 கடல்கலங்கப் புயல்அ டித்துத் தத்த ளிக்கும் கப்பலின் திடமி குந்த தெளிவு கொண்ட திசைய றிந்த மாலுமி இடம றிந்து காலங் கற்ற இந்த நாட்டின் மந்திரி கடன றிந்த காந்தி போதம் கவலை போக்கும் மந்திரம். 4 கர்ம வீரன் காந்தி என்னும் காள மேகக் கர்ஜனை |