444நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தர்ம மான மழைபொழிந்து
       தரணி முற்றும் குளிரவே
வர்ம மான வார்த்தை யாவும்
       வாது சூது செய்திடும்
மர்ம மான எதையும் விட்ட
       ராச மார்க்க மதிதரும்.       5

வீரம்என்றும் சூரம் என்றும்
       வெறிகொ டுக்கும் பேச்சினால்
காரம் உள்ள வார்த்தை யாவும்
       யாரை என்ன செய்திடும்?
தீரர் ஞான காந்தி சங்கம்
       திசைமு ழங்கக் கேட்குது
சேர வாரும் மனித வாழ்க்கை
       சீர்தி ருத்த வேண்டுவோர்.       6

குறிப்புரை:-மாலுமி - கப்பலை இயக்குபவன்; பாடு - துன்பம்;
புயல் - காற்று;நாடுமுற்றும் - நாடுதழீஇய;கவலை - மனத்துயர்.