புலவர் சிவ. கன்னியப்பன் 45

விசைச்சொல்லும் உலகநடை வெவ்வேறு
       நாடுகளில் விரியும் ஞானம்
பசைச்சொல்லும் பலபாஷை அறிவெல்லாம்
       தமிழ்மொழியில் பலக்க வென்றே
திசைச்சொல்லும் கென்றுதனி இடங்கொடுத்தார்
       இலக்கணத்தில் தெரிந்த முன்னோர்
இசைச்சொல்ல இதைப்போல வேறுமொழிக்
       கிலக்கணநூல் எங்கே? காட்டு?       4

எந்தமொழி வந்திடினும் தமிழ்மொழியை
       என்னசெய்யும்? என்றே முன்னோர்
வந்தபிற மொழியையெலாம் வரவேற்றுத்
       தமிழ்மொழியை வளரச் செய்தார்;
செந்தமிழின் சரித்திரத்தைத் தெரியாமல்
       மக்களுக்குத் திரித்துக் கூறி
இந்திமொழி வந்ததென்றே இகழ்ந்துரைப்போர்
       தமிழ்நாட்டின் பெருமை எண்ணார்.       5

பூச்சிபுழு உயிர்களையும் சமமென்று
       போற்றினவர் தமிழ ராவார்.
பேச்சிலுள்ள வேற்றுமைக்கு மனிதர்களைப்
       பிரித்துவிடத் தமிழர் பேசார்;
ஏச்சிலொரு இன்பமுள்ளோர் எக்காலும்
       தமிழர்களின் இனத்தைச் சேரார்;
கூச்சலிட்டு வசையுரைப்போர் கொச்சைகளே
       அதற்குநல்ல சாட்சி கூறும்.       6

வேறெவரும் நுழையாமல் வேலியிட்டுத்
       தமிழ்நாட்டார் வாழ்ந்த தில்லை;
கூறுபடும் பலநாட்டார் கூடிநலம்
       குலவியதித் தமிழர் நாட்டில்;
மாறுபடும் பலமதமும் மருவிமனம்
       கலந்ததெங்கள் தமிழன் மாண்பு;
தேறிமனம் தெளிவடைவோம்; தமிழர்களின்
       பெருங்குணத்தைத் தெய்வங் காக்கும்.       7