காதலை இன்னதென்று - செய்து காட்டும் புறாமணியே வேதனைப் புல்லடிமை - விட்டு விடுதலை விடிவது எப்போ? 5 கூடும்கட் டத்தெரியீர் - ஆனால் கொஞ்சுங் குரங்குகளே! நீடும் அறிவிருந்தும் - உங்கள் நிம்மதி பெற்றிலன் நான். 6 ஆடும் களிமயிலே! - ஒரு ஆரூடம் சொல்லுவையோ? தேடும் உரிமைகளை - இந்தத் தேசம் அடைந்திடுமா? 7 காகம் வழிவிடுமா? - நல்ல கருடன் வலம் வருமா? நாகம் சகுனமுண்டா? - ஒரு நரியேனும் முன்வருமா? 8 என்று மனந்தளர்ந்தே - நான் ஏங்கித் தவித்து நின்றேன் வென்றி தருந்துணைபோல் - ஒரு விண்ணொலி பெண்குரலாய்; 9 ஞானக் குலத்தில் வந்தாய் - பல நற்றவம் உற்றவன்நீ ஏன்உனக் கிந்தமதி? - விட்டே எழுந்திரு என்மகனே! 10 வெள்ளைத் திரைமேலே - படம் வீசும் நிழல்போலே துள்ளிய துன்பம்எல்லாம் - கணம் தோன்றி மறைவ(து) அன்றோ? 11 |