ஏது துன்பம்துய ரேனும் - காதல் இசைந்த எல்லைவர நாணும். 2 கணுவி னோடுகணுக் காதல் - ஒரு கரும்பு நல்ல சுவை ஆதல் கணவ னோடுபெண் காதல் - வீடு கலக மற்றதென ஓதல் அணுவி னோடு அணுக் காதல் - தான்இவ் வகில லோகநிலை ஆதல் பணிவி னோடு அதைப் பார்க்கின் - அதில் பரமன் அருள்விளங்கும் யார்க்கும். 3 278. திக்குத் தெரியவில்லை திக்குத் தெரியவில்லை - என்ன தீவினை செய்தேனோ! மக்கள் படுந்துயரைச் - சற்றும் மாற்ற வகையறியேன்! 1 கூவும் கருங்குயிலே! - ஒரு குறிசொல்ல மாட்டாயா? தேவன் அருள்வருமா? - சுற்றும் தீமைகள் தீர்ந்திடவே! 2 பாடும் பசுங்கிளியே! - என்றன் சாதகம் பார்த்துச் சொல்லு! நாடும் சுதந்தரத்தை - எந்த நாளில் அடைந்திடுவேன்? 3 செய்கை சுறுசுறுப்பாம் - சிறு சிட்டுக் குருவிகளே! வைவதை விட்டுவிட்டு - ஒரு வாழ்த்துரை சொல்லீரோ? 4 |