பள்ளமும் மேடும் சமனாகும்! பாபங் களுக்கும் எமனாகும்! கள்ளமும் சூழ்ச்சியும் கரைந்தோடும் கருணையின் வெள்ளம் நிறைந்தோடும். 4 கலைகளும் கவிதையும் புதுமைபெறும்! கஷ்டமும் சுகங்களும் பொதுமையுறும்! நிலமிசை நீதியை நிலைநாட்டும்! நெறிமுறை புதுப்புல் தலைநீட்டும். 5 சரித்திர வெள்ளித் திரைமேலே சமுத்திர அலைகள் திரள்போலே விரித்திடும் புதுப்புதுக் காட்சிகளை விளக்கிடும் இயற்கையின் ஆட்சியினை. 6 மலைகளும் மரங்களும் சாய்ந்துவிடும்! மனிதருள் பிணக்குகள் ஓய்ந்துவிடும்! தலைவிரித்(து) ஆடிய அகந்தையெலாம் தரையொடு மண்ணில் புகுந்து ஒழியும். 7 சக்திக் கடவுளின் பெருமூச்சே சண்டமாருதம் எனலாச்சே பக்திக்குரியவர் அஞ்சாரே! பாதகர் யாரும் மிஞ்சாரே. 8 280. புத்தாண்டு வரம் (வேலூர்ச் சிறையில் கவிஞர் ஆங்கில வருடப் பிறப்பன்று பாடியது) எண்ணிலா ஆண்டு கண்டுஇங்கு இருந்தவள் எனினும் இன்னும் கண்ணினுக்(கு) இனிய தூய கன்னியாய் என்றும் நின்று தண்ணொளி அழகு காட்டும் தமிழகத் தாயே! இன்றுன் |