புண்ணியம் நிறைந்த வாழ்வில் புதியதோர் ஆண்டு பூண்டாய். 1 காங்கிரஸ் காரர் யாரும் காந்தியெம் அடிகள் ஆதி ஆங்கிலர் சிறையுற் றுள்ள அருந்தவம் கிடக்கும் இந்நாள் ஆங்கி ரசமென்று ஓதும் ஆண்டினைப் பூண்டு வந்தாய் பாங்கியே! இந்தக் கோலம் பார்த்திலம் முன்னம் நாங்கள்! 2 புதியஇவ் வாண்டில் மிக்க புதியதோர் அழகு பூண்டாய்! நிதியமும் இழந்தது எல்லாம் நீயடைந் திட்டாய் போல விதியினைக் கடந்த ஞான வித்தகர் தெளிவு பூண்டாய் புதியது புதியது அம்மா புகுந்தஉன் கோலம் இன்று! 3 வாடினை இருந்த மேனி வளமிகும் வடிவு காட்டிக் கூடின புருவம் இன்று குளிர்ந்தன களிக்கக் கண்டோம்! பாடின இனிய கீதம் பற்பல ஆண்டுக்(கு) இப்பால் ஆடினை அடையா ளத்தை அறிந்திலம் முதலில் நாங்கள். 4 முன்னம்நீ எம்பாற் கொண்ட முணுமுணுப்பு இன்று காணோம்! அன்னைநீ முன்னம் காட்டும் அருவருப்பு இன்று காணோம்! |