பின்னும்நீ எம்பாற் பேசும் பிணக்கினைக் காணோம் இந்நாள் என்னவோ புதுமை யாக இருக்கிறது எங்கள் தாயே! 5 வீட்டினில் இருந்த போது வெகுண்டுஎமை மருண்டு பார்ப்பாய்! கூட்டினிற் கிடக்கும் இந்நாள் குளிர்ந்தனை சிரித்து வந்தாய்! நீட்டினை முடங்கி நொந்த நின்னுடை அங்கம் பூத்துக் காட்டினை என்றுங் காணாக் கட்டழ குடனே வந்தாய். 6 எண்ணெயும் மறந்த உன்றன் இருண்டிடை சுருண்ட கூந்தல் வண்ணமாய் வாரி மிக்க வாசனை மலருஞ் சூடித் திண்ணமாய்ச் சத்திக் கான திலகமும் தீட்டி யுன்றன் கண்ணியல் மையினோடு கலவையின் மையுந் தீட்டி. 7 பற்பல ஆண்டின் முன்னே வெறுத்தஉன் பணிகள் எல்லாம் அற்புத உன்றன் மேனி அழகுற அணிந்தாய் இன்று; கற்பனை கடந்த வேலை கதிர்விரி உடையும் பூண்டாய்; நிற்பது கண்டோம்; என்ன நினைந்துஇவை புனைந்தது அம்மா! 8 புத்தொளி புனைந்தே எம்முன் புத்துயிர் அளிக்க வந்தாய்; |