கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு! 25 31. தமிழைப் பேணுவோம் பாஷைக ளெல்லாம் பசையற நாணிக் கூசிக் கூசிக் குறைபடச் செய்யும் வாசத் தமிழை வரையிலாத் தொன்மையை வீசும் தமிழை விரிந்த கடலினைத் தேனினும் பாகினும் தெள்ளிய அமுதினும் 5 எனினும் எதனினும் இனித்திடும் தமிழைத் தின்னத் தின்னத் தெவிட்டாத் தமிழைப் பன்னப் பன்னப் பலக்கும் தமிழைக் கொள்ளக் கொள்ளக் குறையாத் தமிழைக் கள்ளக் கபடுகள் இல்லாத் தமிழைப் 10 படிக்கப் படிக்கப் பயனேதந்து குடிக்கக் குடிக்கக் குறையா அமுதை என்தாய் மொழியினை என்னுடைத் தமிழை உன்தாய் மொழியினை உம்முடைத் தமிழை எம்மையும் உம்மையும் மற்றுமிங் கெவரையும் 15 செம்மையாம் நம்முடைச் சிறுபிரா யத்தினில் தொட்டிலில் விட்டுக் கட்டிலில் வைத்துத் தோளிலும் மார்பிலும் தூக்கித் திரிந்து பாலூட்டி வளர்த்த பாவையாம் தமிழைத் தாலாட்டி வளர்த்த தாயாம் தமிழைச் 20 சீராட்டி வளர்த்த சீர்பெறும் தமிழைப் பாராட்டி வளர்த்தப் பழையதோர் தமிழைக் கோவண முடுத்துப் பாவாடை தந்த தேவியாம் தமிழைத் தெய்வநற் றமிழை ஆசையாம் மனைவியை அகத்தினில் விட்டு 25 |