‘சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்?‘ என்றெவரும் சாதிப் பாரேல், இங்கேதும் தடையில்லை; ஏற்றுக் கொள்வோம்; எல்லாமே தமிழ்ப்பாட்டா யிருந்தா லென்ன? சிங்கார வாதங்கள் பலவும் பேசிச் சிறப்பான முயற்சியிதைச் சிதைக்க லாமோ; தங்காமல் தயங்காமல் தளர்ந்தி டாமல் தமிழ்நாட்டார்; இச்செயலைத் தாங்க வேண்டும். 6 கேட்டிருந்தார் பாடினவர் எல்லாம் சேர்ந்து கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி நல்லஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும்; பாட்டினுடன் இலக்கியமும் படியப் பாடிப் பருந்தோடு நிழல்செல்லும் பான்மை காப்போம்; கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்திடாமல் குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்க வேண்டும். 7 பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்; பற்பலவாம் முறைகளையும் பழக வேண்டும்; விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும் விதம்விதமாய்த தமிழ்மொழியில் விரிக்க வேண்டும்; அலைநீட்டும் கடல்கடந்த அறிவா னாலும் அத்தனையும் தமிழ்வழியில் ஆக்க வேண்டும்; நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக் கென்றே நிச்சயமாய் உழைக்கஒரு நிலையம் வேண்டும். 8 ஆதலினால் தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டிற்கே ஆதரவிங் ககத்தியமாய் அதிகம் வேண்டும்; காதலினால் தாய்மொழியைக் காப்ப தன்றிக் கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தல்ல; தீதல்லா திம்முயற்சி சிறப்புற் றோங்கத் திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி |