86நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கணமிருந்தும் கண்டதில்லை; காட்டிருந்தும்
       வீடிருந்தும் கனதை யுண்டோ?
குணமிருந்து பொறுமையுடன் குறையிரந்தார்
       ஏழைகளைக் குறித்து வாடும்
மனமிருந்தார் அடைந்திடுமோர் மாட்சிமைக்கு
       நீயுமொரு சாட்சி யானாய்.       5

குறிப்புரை:- கனதை - பெருமை; மாட்சிமை - பெருமை.

45. கோபாலகிருஷ்ண கோகலே

படிப்பெனும் கடலை நீந்திப்
       பணமெனும் ஆசை போக்கிக்
கடிப்புடன் மமதை யென்னும்
       கலையிலா தொழுகி நின்று
துடிப்புடன் இந்து தேசத்
       தொண்டனாம் தலைமை பூண்டு
கொடிப்படை யில்லா தாண்டான்
       கோகலே என்னும் வேந்தன்.       1

ஜாதிமத பேதமெல்லாம் கடந்து நின்றான்
       தனிப்பெரிய குலத்துதித்த தகைமை யுள்ளோன்
‘மேதினியில் உடன்பிறந்த உயிர்க ளெல்லாம்
       மெலிவின்றிப் பசிநீக்கிக் களிப்ப தொன்றே
ஊதியமாம்‘ எனக்கருதி உழைப்ப தற்கே
       உடலோடு பொருளாவி உதவி நின்றான்
கோதிலனாம் கோபால கிருஷ்ண னெங்கள்
       கோகலே யவன்பெருமை கூறப் போமே!       2

தன்சுகமாம் தன்னாட்டார்சுகமே யென்றும்
       தன்னறிவாம் தன்னாட்டார் அறிவே யென்றும்
தன்பெருமை தன்னாட்டார் பெருமை யென்றும்
       தன்சிறுமை தன்னாட்டார் சிறுமை யென்றும்