புலவர் சிவ. கன்னியப்பன் 85

தேற்றிடவே முன்னின்றாய் தெளிவுடையாய்
       தாதாபாய் நவரோ ஜியே!
தேவருடன் கலந்தனையோ எங்குறையை
       அங்கவர்க்குச் செப்ப வேண்டி?       1

‘இருங்கிழவி பெருந்தேவி இந்தியநா
       டெம்மையெலாம் ஈன்ற தாயின்
உறுங்கிழமை சுதந்தரங்கள் ஒன்றேனும்
       குறையாமல் வந்தா லன்றி
நெருங்கிய நோய் பஞ்சங்கள் ஒருபோதும்
       நீங்கா‘ வென்றுறுதி சொன்ன
பெருங்கிழவா! தாதாபாய் நவரோஜி!
       உன்பெருமை பெரிதே யாகும்.       2

‘பேசுவதால் பெறுவதில்லை பிதற்றுவதால்
       பெருமையில்லை பிறரை நொந்தே
ஏசுவதால் நேசமில்லை இழிந்ததனால்
       களித்ததில்லை என்று சொல்லித்
தாசனென உழைத்திடவே வேண்டுமென்று
       தளராமல் உழைத்துக் காட்டி
ஆசையுடன் நீயுரைத்த அம்மொழியை
       எக்காலும் மறவோம் ஐயா!       3

உடலமது தளர்ந்தாலும் உன்னுறுதி
       தளராமல் உழைத்து நின்றாய்;
சடலமது மானிடராய்ப் பிறந்தவர்கள்
       இதைவிடவும் சாதித் தாரோ?
கடலுலகில் பிறந்தவர்கள் கணக்கற்றா
       ரென்றாலும் கருதில் நீயே
அடைவரிய சென் மத்தின் அரும்பயனை
       அறிந்தவரை அடைந்தாய் ஐயா!       4

பணமிருந்தும் பெருமையில்லை; பந்துஜன
       மித்திரர்கள் பறந்து சூழ்ந்தும்