90நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சுந்தர கவிகள் பாடும்
       சொல்வள முடையோன் தாகூர்.       2

கருணையின் உருவு காட்டும்
       கவிரவீந் திரநாத் தாகூர்
அருணனாய் உலகுக் கெல்லாம்
       அறிவொளி பரப்பி வாழ்ந்தான்
மருணெறி மாற்ற இந்த
       மாநில மக்கட் கெல்லாம்
பொருணெறி சாந்தி சொல்லும்
       புத்தக மாக நிற்பான்.       3

அரசியல் போராட் டத்தில்
       ஆழ்ந்திலன் என்றிட் டாலும்
புரைசெயும் அடிமை வாழ்வின்
       புண்ணையே எண்ணி எண்ணிக்
கரைசெய முடிந்தி டாத
       கவலையால் கண்ணீர் பொங்க
உரைசொலி அடிமைக் கட்டை
       உடைத்திடத் துடித்தோன் தாகூர்.       4

‘ஒத்துழை யாமை‘ என்று
       காந்தியார் உரைக்கும் முன்னால்
இத்துரைத் தனத்தார் தம்மோ
       டிணங்கிடப் பிணக்கி விட்டோன்.
பற்றுகள் அவர்முன் தந்த
       பட்டமும் பரிசும் வீசித்
சுத்தியை முதலிற் செய்த
       சுதந்தர தீரன் தாகூர்.       5

காந்தியும் ‘குருதேவ்‘ என்று
       கைகுவித் திறைஞ்சும் தாகூர்
மாந்தருள் பலநாட் டாரும்
       மதங்களும் மருவி வாழ்ந்து