தேர்ந்த நல்லறிவை அன்பைச் செகமெலாம் பரப்ப வென்றே ‘சாந்திநிகேதன்‘ என்ற சமரச சங்கம் தந்தோன். 6 கலைகளின் வழியே தெய்வக் கருணையைக் காண்ப தென்னும் நிலையினைப் படிக்க வென்றும் நிறுவிய நிலையம் ஈதாம் சிலைதரல் ஆடல் பாடல் சித்திரம் நடிப்ப ரங்கம் பலவித வித்தை எல்லாம் பயிலுதற் கிடமாய் நிற்கும். 7 தாய்மொழிப் பற்றும் தங்கள் கலைகளைத் தாங்கி நிற்கும் ஆய்மையும் வங்கா ளிக்கே அதிகமாம்; அதனால் எல்லாச் சீமையும் தாகூர்ப் பாட்டைச் சிறப்புறப் பரப்பி னார்கள்; வாய்மையைத் தமிழர் போற்றி வளர்ப்பரோ தமிழின் மாண்பை? 8 குறிப்புரை:-சீமை - தேசம் (8); வித்தை - தந்திரத் தொழில்; மாசாலம்; போற்றி -வணங்கி. 48. தேசிக விநாயகம் பிள்ளை தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பதென்றன் செவிப்பெருமை; ஆசிய ஜோதியெனும் புத்தர்போதம் அழகுத் தமிழில்சொன்னான் அதுபோதும் 1
கோழி குலவிவரும்; கிளிகொஞ்சும்; குழந்தை எழுந்துதுள்ளிக் களிமிஞ்சும்; |