புலவர் சிவ. கன்னியப்பன் 207

அன்பெனும் அணிகலம் ஒளிவீசும்
       ஆதர வாகிய மொழிபேசும்
புன்சிரிப் பங்கே பொங்கிவரும்
       பூரிப் பங்கே தங்கிடுமே.       3

அறிவெனும் அணிகலம் அழகினோடும்
       அச்சமற் றெங்கணும் பழகிவிடும்
பறிமுதல் செய்திட முடியாது
       பகைவர் என்பதும் கிடையாது.       4

கல்வியும் கேள்வியும் பொன்னாகும்
       கருணையின் மெருகே மின்னாகும்
நல்லின நட்புகள் நவமணிகள்
       நகைமுக அணிகலம் தவமெனலாம்.       5

பூண்டவர் தமக்கொரு தென்புதரும்
       புறத்துள எவர்க்கும் இன்புதரும்
ஆண்டவன் நினைவொடு பணிபுரியும்
       அன்புடை அறிவே அணிகலமாம்.       6

152. அன்பு

அன்பு என்ற ஒன்றைநாம்
       அறிந்து கொள்ளக் கூடுமேல்
துன்பம் என்ற யாவையும்
       தூர மாக ஓடுமே
வம்பு வாது வார்த்தைகள்
       வாய டங்கிப் போகுமே.
இன்ப மாக நாமெலாம்
       இங்கிருந்து வாழலாம்.       1

ஜாதி பேதச் சண்டையும்
       சமய பேதக் கொடுமையும்
மோதி மோதிமக்கள் தம்மை
       மூடராக்கும் மடமையும்