புலவர் சிவ. கன்னியப்பன் 313

197. சுதந்தரம் யாது?

அச்சம் விட்டது சுதந்தரம்
       அன்பு விடாதது சுதந்தரம்;
இச்சைப் படிசெயல் சுதந்தரம்;
       இடர்செய் யாதது சுதந்தரம்;
பிச்சை கொள்ள விரும்பாது
       பிறருக் கீய வருந்தாது
கொச்சை மொழிகளைச் சொல்லாது
       கோணல் வழிகளில் செல்லாது.       1

மடமை விட்டது சுதந்தரம்
       மானம் விடாதது சுதந்தரம்;
கடமை உற்றது சுதந்தரம்;
       கபடம் அற்றது சுதந்தரம்
கொடுமை கண்டு பொறுக்காது
       கொடியவர் தமையும் வெறுக்காது
அடிமை செய்து சுகிக்காது
       யாரையும் அடிமை வகிக்காது.       2

கொல்லக் கூசும் சுதந்தரம்
       கொள்கைக்கு உயிர்தரும் சுதந்தரம்
எல்லை விட்டு நடக்காது
       எதிரியை ஒண்டி மடக்காது
வெல்லற் கேனும் பொய்யாது
       வேற்றுமைக் காரரை வையாது
பல்லைக் கெஞ்சிப் பிழைக்காது
       பட்டதன் தோல்வி ஒளிக்காது.       3

தன்சோ றுண்பது சுதந்தரம்
       தன்துணி யணிவது சுதந்தரம்
என்னே வறுமை வந்தாலும்
       எத்தனை வறுமை வந்தாலும்