தன்னேர் செம்மை பிரியாது தன்குறை சொல்லித் திரியாது பொன்சேர் போகம் மதிக்காது பொய்ப்புகழ் பாடித் துதிக்காது. 4 தாழ உரைப்பது சுதந்தரம்; தன்மதிப் புள்ளது சுதந்தரம்; ஏழை செல்வன்என்(று) எண்ணாது எவருக் கும்குறை எண்ணாது ஊழிய னாகப் பணிசெய்யும் உலகுக்கு எல்லாம் அணிசெய்யும் வாழிய மக்கள் எல்லோரும் வாழிய வென்றே அதுகோரும். 5 குறிப்புரை;- கடமை - கடப்பாடு, ‘என்கடன் பணிசெய்து கிடப்பதே‘ என்பது அப்பர் வாக்கு. 198. கிளியும் வழியும் ஆதிசு தந்தரத்தைக் கிளியே அடைய வழிதேடு; நீரதன் திருவடியைக் கிளியே நாடி செயம்பாடு. 1 இந்தப் பெருநிலத்தில் கிளியே இச்சைப் படிப்பறக்க சொந்தம் உனக்கிலையோ கிளியே செல்லடி வாய்திறந்து. 2 காட்டினி லேபிறந்தாய் கிளியே காற்றென வேபறந்தாய் கூட்டினி லேகிடக்க கிளியே கூசலை யோஉனக்கு. 3 தங்க மணிக்கூண்டில் கிளியே தங்கி இருந்தாலும் அங்குச் சுதந்தரத்தின் கிளியே ஆனந்தம் ஏதுனக்கு? 4 சொந்தம் எலாம்மறந்து கிளியே சுற்றமெல் லாம்துறந்தே இந்தப் படியிருக்கக் கிளியே இச்சைகொண் டாயோநீ! 5 பச்சை மரக்கிளைமேல் கிளியே பாடுதல் நீமறந்தாய் இச்சை உயிர்மேலே கிளியே இன்னும் எதற்காக? 6 |