322நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பெற்றோர் இருவருள் பெற்றவள் ஆகிய
அன்னையின் மகிழ்ச்சி அளவுக்கு அடங்குமோ?

203. அவனும் அவளும் விரும்பிய நாடு

மன்னவன் என்ற மனிதனில்லை - அங்கே
       மந்திரி தந்திரி யாருமில்லை.
சின்னவர் என்றும் எவருமில்லை - பட்டம்
       தேடி அலைந்திடும் மக்களில்லை.       1

ஊருக்குப் பத்துப்பேர் நல்லவர்கள் - பொது
       யோசனை செய்திட வல்லவர்கள்
ஆருக்கும் எதிலும் ஓரங்கள் செய்யாமல்
       அப்பப்போ தீர்ப்புகள் செப்பிடுவர்.       2

நல்லவர் கெட்டவர் என்பதெல்லாம் - அங்கே
       ராஜாங்கம் பட்டம்ப தவியல்ல
சொல்லில் நடத்தையில் சூரத்தில் தீரத்தில்
       சுத்தரென் றுபலர் நத்துவதே.       3

கச்சேரி என்றுஒரு கட்டிடமும் - அதைக்
       கண்டு நடுங்குதல் அங்கிலையே
அச்சம்இல் லாமலே யாரும் பொறுப்புடன்
       அங்கங்கே நீதிந டத்திடுவார்.       4

வீதிக்கு வீதியோர் நீதிஸ்தலம் - பத்து
       வீட்டுக்கு அங்கொரு பள்ளிக் கூடம்.
நீதிக்கே ஓடி அலைந்து செலவிட்டு
       நிலைகெட்டுப் போகிற நிந்தையில்லை.       5

பள்ளிப் படிப்புக்குச் சம்பளம் - இன்னும்
       பரீட்சைக்குக் கட்டப் பணமெனவும்
பிள்ளைகள் பந்தாடப் பின்னும் பணம்என்று
       பிச்சிப் பிடுங்குதல் அங்கில்லையே.       6