புலவர் சிவ. கன்னியப்பன் 337

211. என்னுடை நாடு

;இந்திய நாடிது என்னுடை நாடே;
       என்று தினந்தினம் நீயதைப் பாடு;
சொந்தமில் லாதவர் வந்தவர் ஆள
       தூங்கிக் கிடந்தது போனது மாள;
வந்தவர் போனவர் யாரையும் நம்பி
       வாடின காலங்கள் ஓடின தம்பி!
இந்தத் தினம்முதல் "இந்திய நாடு
       ‘என்னுடை நாடெ‘ன்ற எண்ணத்தைக் கூடு.       1

கன்னி இமயக் கடலிடை நாடு
       கடவுள் எமக்கெனக் கட்டிய வீடு;
என்ன முறையி(து) ஏனிதை வேறு
       இன்னொரு நாட்டினர் ஆள்வது கூறு;
சொன்னவர் கேட்டவர் யாரையும் நம்பிச்
       சோர்ந்து கிடந்தது தீர்ந்தது தம்பி!
என்னுடை நாட்டினை நானிருந்து ஆள
       இந்தத் தினம்முதல் எண்ணுவன் மீள.       2

தன்னுடை வேலையைத் தான்செய்வ தாலே
       தப்புவந் தாலும் சுதந்தரம் மேலே;
இன்னொரு யாருக்கும் இதிலென்ன கோபம்?
       என்றன் உரிமைசொன் னால்என்ன பாபம்?
அன்னியர் ஆள்வதில் நன்மை வந்தாலும்
       அடிமையின் வாழ்வது நரகம்எந் நாளும்;
என்னுடை வீட்டுக்கு நான்அதி காரி
       என்பது நான்சுய ராச்சிய பேரி.       3

பாரத நாடுஎன்றன் பாட்டன்றன் சொத்து;
       பட்டயத் துக்குஎன்ன வீண்பஞ்சா யத்து?
யாரிதை வேறோர் அன்னியர் ஆள?
       அருகில் கிடைத்தது போனது மாள;