கொலைவழி மறுப்பவர் தமிழ்மக்கள் கொள்கையில் சிறப்பவர் தமிழ்மக்கள் நிலைதரும் வள்ளுவன் மொழிகற்போர் நிச்சயம் காந்தியின் வழிநிற்பார். 12 குறிப்புரை:- தணல் - நெருப்பு; சற்குணம் - நல்ல குணம்; இம்சை வழி - துன்ப வழி. 225. புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டுமடா! புரட்சி என்னும் சொல்லின் பொருளினும் புரட்சி வேண்டுமடா! 1 புத்தம் புதிதென நத்தப் படுவதைப் புரட்சி என்றிடலாம்; நித்தம் கண்டுள சொத்தை வழிகளில் புரட்சி நின்றிடுமோ! 2 மருட்சி தந்திடும் முரட்டு வார்த்தையில் புரட்சி வந்திடுமோ? திரட்சி யாகிய மகிழ்ச்சி வாழ்க்கையைத் தீயன தந்திடுமோ! 3 பொதுநலம் வந்திடப் புதுவழி தந்தால் புரட்சி அதுவாகும்; சதிபல செய்திடும் வழிகளில் விழுவதும் புரட்சி மதியாமோ? 4 வேதனை யேதரும் தீதுள நெறிபல புரண்டு வீழ்ந்திடும்ஓர் போதனை தந்திடும் நூதன வழிகளில் புரட்சி சூழ்ந்திடுவோம். 5 |