சூதுகள் அரசியல் நீதிகள் என்றிடும் சுத்தப் பொய்யுரையை வீதியில் சந்தியில் விழிக்க விட்டுஒரு புரட்சி செய்திடுவோம். 6 கொன்று குவிப்பதைவென்றி எனச்சொலும் கொச்சை எண்ணமெலாம் சென்று மறைந்தன என்று சொலும்ஒரு புரட்சி பண்ணிடுவோம். 7 சண்டையும் கொலைகளும் பண்டைய நாள்முதல் கண்டு களித்ததடா! வண்டர்கள் வழிகளைக் கொண்ட புரட்சியில் நன்மை பலித்திடுமோ? 8 தீமையி னால்ஏதும் நன்மைகள் வரினும் தேய்ந்தவை மாய்ந்துவிடும். வாய்மையின் அன்பால் வருகிற நலமே புரட்சி வாய்ந்ததுவாம். 9 உத்தமன் காந்தியின் உபதே சம்தான் புரட்சி போதனையாம்; சத்திய நெறிதரும் சாத்விக முறையே புரட்சி சாதனையாம். 10 குறிப்புரை:- சூது - வஞ்சனை; வேதனை - துன்பம்; வண்டலர்கள் - மங்கல பாடகர்கள். 226. மன்னவன் நானே மன்னவன் நானே மந்திரி என்சொல் மற்றவர் யாருக்குச் சுற்றமிது? என்னுடை நாடு என்னுடை வீடு யாரிதில் என்னை மிரட்டுவது |