231. தேசபக்தர் திருக்கூட்டம் தேச பக்தர்திருக் கூட்டம் - தேச சேவை செய்வதுஎங்கள் நாட்டம்; பாச பந்தம் எல்லாம் ஓடி - விடப் பாரதப் பெருமை பாடி (தேச)1 பிச்சை எடுக்கவந்தது அல்ல - வேறு பிழைக்க வழியிலை என்று அல்ல இச்சை வந்துமிகத் துள்ள - தேசம் இருக்கும் நிலைமைதனைச் சொல்ல. (தேச)2 தூங்கித் தூங்கிவிழும் தமிழா! - உன் தூக்கம் போக்கவந்தோம் தமிழா! ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா! - உன்னை எழுப்ப வந்தசக்தி தமிழா! (தேச)3 எழுந்து நின்றுகண்ணைத் துடைத்தே - உன் இருகை யாலும்கொடி பிடித்தே அழுந்திக் கீழிருந்து வாடும் - அன்னை அடிமை நீக்கவழி தேடும். (தேச)4 வெட்டி வெட்டியெறிந் தாலும் - எமை வேறு இம்சைபுரிந் தாலும் கட்டி ரத்தம் சொரிந்தாலும் - நாங்கள் தூய்மை மாறிடோம் நாளும். (தேச)5 சாந்த மூர்த்தியந்தக் காந்தி - சொன்ன சத்தி யந்தனையே ஏந்தி மாந்தர் யாரும்இனி உய்ய - உயர் மார்க்க போதனைகள் செய்ய. (தேச)6 தேவி சக்திதுணை கொண்டு - இந்தத் தேசம் சுற்றிவர வென்று கூலிக் கூலியெங்கள் தொண்டு - செய்யக் குறைகள் தீரும்இனி நன்று. (தேச)7 குறிப்புரை:-இச்சை - விருப்பம்; மாந்தர் - மக்கள். |