புலவர் சிவ. கன்னியப்பன் 63

வாதெல்லாம் விலக்கி, கலைவாண ரெல்லாம்
வல்லநல்ல தமிழ்பாடி வாழ வேண்டும்.       9

குறிப்புரை:- சிக்கு - தடை; வாதம் - சண்டை, சபதம்;
அகத்தியம் - கட்டாயம், அவசியம்.

33. திருக்குறள் பெருமை

அமிழ்தமென்று மிகமகிழ்ந்தே
       அறிஞர்யாரும் போற்றிட
அறிவறிந்த மொழிஇதென்றே
       அகிலமெங்கும் ஏற்றிடும்
தமிழ்மொழிக்கிங் கழிவிலாத
       நன்மைசூட்டி வைத்ததும்
தரணியெங்கும் இணையிலாத
       இல்லறத்தை தந்திடும்.       1

அமைதிமிக்க ஜனசமுகம்
       தமிழரென்ற கீர்த்தியும்
அடிமையற்ற குடிமைபெற்ற
       அரசுகண்ட நேர்த்தியும்
இமையவர்க்கும் நெறிபுகட்டும்
       எங்கள் தெய்வ வள்ளுவன்
இங்குரைத்த குறள்களென்ப
       ஈந்தநன்மை அல்லவோ!       2

காடுசென்று குகையடைந்து
       கண்கள்மூடி எண்ணியும்
காவிகட்டி ஓடெடுத்துக்
       கஷ்டவாழ்க்கை பண்ணியும்
தாடிவைத்து மொட்டைதட்டித்
       தவசியென்ற பேருடன்
தரணிமெச்ச ஊர்கள்சுற்றித்
       தருமபோதம் கூறியும்.       3