பக்கம் எண் :

16

  தெய்வ பத்தி
  உலகெல்லாம் பட்டமாண் டாலும்-தெய்வ
பலமில்லார்க் கில்லையே பாக்ய மெக்காலும்-மதி
  6
  தலைமேலே மலைவிழுந் தாலும்-தெய்வ
பலமுடையார்க்குண்டோ பய மொருகாலும்-மதி
  7
  உடலுயிர் பலபல வுடைமை-எல்லாம்
திடமுட னீந்தோனைச் சேவித்தல் கடமை-மதி 
  8
  பரவச மாகவுள்  ளுருகு-ஐயன்
திருவருள் நினைந்து நீதினங் கண்ணீர் பெருகு-மதி
  9
  சூதான மாயப்ர பஞ்சம்-இதில்
நாதனல்லாது ந மக்குண்டோ தஞ்சம்-மதி 
  10
  முன்னம் பொருளெல்லாந் தந்து-பின்பு
தன்னையுந் தந்தவன் தாள்தொழ முந்து-மதி
  11
  மாதா பிதா குரு தெய்வம்-ஆன
நாதனார் கைவிடில் நாமென்ன செய்வம்-மதி
  12
  துக்கசாகரஞ் சம்சாரம்-கரைப்
பக்கமே றிடப்பரன் பாதமா தாரம்-மதி
  13
  நீரைவிட்டாற் கெடும் மீனே-ஈச
னாரைவிட் டால்நமக் கார்துணை மானே-மதி
  14
  நாஞ்செய்வ தெல்லாம் விகாரம்-கர்த்தர்
தாஞ்செய்வ தெல்லாம் தகுமுப காரம்-மதி
  15
  தேவனை நினையாத வுள்ளம்-பெரும்
பாவமும் பழிகளும் படிந்திடும் பள்ளம்-மதி
  16
  ஈசனைப் போற்றாத வாயே-ஒரு
காசுக் குசவாக் கசப் பெட்டிக்காயே-மதி
  17