பக்கம் எண் :

19

  பெண்மதிமாலை
  கற்றவளே துரை சானி-கல்லா
மற்றவளே சுத்த மடை சாம்ப்ராணி-மதி
  36
  தாழ்வோரை நீசிரி யாதே-மிக
வாழ்வோரைக் கண்டுநீ வயிறெரி யாதே-மதி
  37
  நாட்டிலெவரையும் வை யாதே-உன்றன்
பாட்டிசொன்னாலுநீ பாவஞ் செய்யாதே-மதி
  38
  பூச்சியைப் பிடித்துக்கொல் லாதே-உன்றன்
ஆச்சி சொன்னாலுநீ யபத்தஞ் சொல்லாதே-மதி
  39
  பிட்சையிடாம லுண் ணாதே-ம்ருகம்
பட்சிக்கு மேதுன்பம் பண்ண வொண்ணாதே-மதி
  40
  இட்டமாய் நல்லோரைக் கூடு-பொல்லாத்
துட்டரைக் கண்டால்நீ தூரத்திலோடு-மதி
  41
  ஊரார் பொருளைத் தொடாதே-நாலு
பேரறி யும்படி பிச்சை யிடாதே-மதி
  42
  நித்தமும் நீரிலே முழுகு-வீடு
சுத்தமாகும்படி தோகையே மெழுகு-மதி
  43
  புழுநிறை யூத்தைச் சரீரம்-இதைக்
கழுவாவிட்டால் நாறும் காதவித்தாரம்-மதி
  44
  அழுக்கு வத்திரங்கள்கட் டாதே-உடல்
கொழுக்கவுண்ணும் தீனி குடலிலொட்டாதே-மதி
  45
  சூதும் வாதும்படி யாதே-நாளும்
தீதுசெய் தால்தரித் திரம் விடியாதே-மதி
  46
  கோட்சொல்லி குடிகெடுக் காதே-தப்புச்
சாட்சி சொல்லுங்குடி தலையெடுக்காதே-மதி
  47