பக்கம் எண் :

20

  அறிவுரை
  கோளும் புரளியுங்கே ளாதே-எந்த
நாளும் புரளிபேச நாக்குநீ ளாதே-மதி
  48
  வந்ததுன் பத்திலா ழாதே-மிகச்
சந்தோசம் வந்தாலுந் தலைகீழ் விழாதே-மதி
  49
  வேலைக்குநீ சிணுங் காதே-ஒரு
மூலைக்குட் புகுந்துநீ முணுமுணுக்காதே-மதி
  50
  வேலைசெய்வோரை வாட் டாதே-தினம்
ஆலைக் கரும்புபோ லவரை யாட்டாதே-மதி
  51
  நெடுநேரம் படுத்துத்தூங் காதே-தூங்கும்
விடியா மூஞ்சிகளுக்கு விசனம் நீங்காதே-மதி
  52
  ஆரையுஞ் சீறியே சாதே-வேலைக்
காரர்களுட னேசக் கந்தம் பேசாதே-மதி
  53
  புருடர்கள் பார்க்கநில் லாதே-கோடி
வருடம் வாழ்வதுபோல்துன் மார்க்கங்கல்லாதே-மதி
  54
  தங்கை அக்காள் அண்ணன் தம்பி-மேலே
சங்கையு மன்புள் ளவள் தங்கக்கம்பி-மதி
  55
  சற்றுங் கூலியைக்குறைக் காதே-செய்த
குற்றத்தைப்பொய் சொல்லி நீ மறைக்காதே-மதி
  56
  பண்டங்களை யழிக் காதே-சும்மா
கண்டபடி சேலை களைக் கிழிக்காதே-மதி
  57
  உன்னை நீ புகழ்ந்துகொள் ளாதே-பிறர்
நன்னயப் புகழ்ச்சியை நம்பித் துள்ளாதே-மதி
  58
  மிஞ்சின செலவுசெய் யாதே-செய்து
கஞ்சிக்குக் காற்றாகப் பறந்து நையாதே-மதி
  59