பக்கம் எண் :

22

  அறிவுரை
  அநியாய வட்டிவாங் காதே-வாங்கில்
இனியகை முதலும்போம் ஏக்கம் நீங்காதே-மதி
  72
  அளவு நிறையைக்குறைக் காதே-ஒரு
சுளகாலே யானையை நீ மறைக்காதே-மதி
  73
  அகவிலை தன்னையேற் றாதே-நாளும்
தகவே செல்லாப்பணந் தன்னை மாற்றாதே-மதி
  74
  புண்ணியஞ் செய்யக்கூ சாதே-இந்த
மண்ணிலிருந்து வழக்  கோரம் பேசாதே-மதி
  75
  நடக்குஞ் சந்த்ராதித்தர் மாதே-தெற்கு
வடக்கானாலு நீ வார்த்தை தப்பாதே-மதி
  76
  ஒன்றுக்கு மஞ்சிநில் லாதே-பாலைக்
கன்றுக் கில்லா மற் கறக்கச் சொல்லாதே-மதி
  77
  தீயார் சொல்லைப் பொறுப் பாயே-யெட்டிக்
காயென்று சொன்னாற் கசக்குமோ வாயே-மதி
  78
  தீயென்று சொன்னால்வாய் வேமோ-கெடு
வாயொன்றொருவர் சொல்லில் வாழ்வெல்லாம் போமோ-மதி
  79
  புகழு மிகழும்வாய்க் காற்று-இதில்
மகிழ்வும் வருத்தமும் கொள்ளாமல் மாற்று-மதி
  80
  சதிகாரர் வலையிற் படாதே-கல்வி
மதியில்லாதவனுக்கு வாழ்க்கைப்படாதே-மதி
  81
  குணவா னெளியனா னாலும்-அவன்
மணவாளனாவது மாசெல்வம்போலும்-மதி
  82
  புகழுடையோனை விடாதே-துஷ்டன்
மகராசனானாலு மாலையிடாதே-மதி
  83