பக்கம் எண் :

31

  பெண்மதிமாலை
  ஆரியக் கூத்தாடி னாலும்-நல்ல
காரியத் திற்கண்ணை வைப்பாய்மென் மேலும்-மதி
  166
  புண்ணிய மெவர்க்கு மனோக்யம்-உயர்
விண்ணினும் மண்ணினும் வேறுண்டோ பாக்யம்-மதி
  167
  சிட்டரைத் துட்டரும் புகழ்வார்-பெருந்
துட்டரைத் துட்டரும் துதியாம லிகழ்வார்-மதி
  168
  இவ்வுல கத்தினுங் கண்யம்-தரும்
அவ்வுல கத்தையு மடைவிக்கும் புண்யம்-மதி
  169
  அருமையா நான்பெற்ற மாதே-வாழ்த்து
திருவேத நாயகன் சேவடிப் போதே
  170
  மதியிது மதியிது பெண்ணே-புண்ய
வதியல்ல வோநல்ல மகராசி கண்ணே.