பக்கம் எண் :

33

  பெண்மதிமாலை
  வீட்டுவே லைதெரி யாதவள் வேம்பு
    மினுக்கும் அவள்குலுக்கு மேவெறும் வீம்பு
கூட்டுநற் குணமில்லாக் கொடியவள் பாம்பு
    குலத்தைக் கெடுக்கவந்த கோடாலிக் காம்பு
  (நல்ல) 4
  நகைகள் தரித்துமஞ்சள் வாடைகள் பூசி
    நாடெங்குந் தெரியவே நகைத்துக்கை வீசி
சொகுசுட னடப்பவ ளாயிரந் தாசி
    சும்மாவந் தாலுமவள் வேண்டாஞ் சீச்சீ
  (நல்ல) 5
  தேவதா பத்தியில் லாதவள் கள்ளி
    திருட்டுக்கும் புரட்டுக்கு மவளொரு பள்ளி
தாவில் புருடன்குடிக் கவள்பெருங் கொள்ளி
    சனியனை விலைக்குவாங் காமல்நீ தள்ளி
  (நல்ல) 6
  உடைமைக ளுடன்பணங் காசின்மே லிச்சை
    உள்ளவள் சண்டைக்குக் கட்டுவாள் கச்சை
இடைவி டாமலிவ ளாற்கெடும் லச்சை
    இவளைக்கொள் ளுவதிலும் எடுக்கலாம் பிச்சை
  (நல்ல) 7
  சந்ததங் கணவன்மே லொழியாத பத்தி
    சாந்தம் பொறுமை தயைதானம் நற்புத்தி
எந்த வேளையு முடலாத்தும சுத்தி
    இல்லா தவளவள் கழுத்துக்குக் கத்தி
  (நல்ல) 8
  நல்லவ ளேழையா னாலுந் தொடாதே
    நானூறு போனாலும் நீபின்னி டாதே
பொல்லா தவள்கையிற் காட்டிக்கொ டாதே
    புலியைக் கொண்டுவந்தென்னைத் தெருவில்விடாதே
  (நல்ல) 9