| பெண்மதிமாலை |
| பாக்யவ தியவள் பக்கத்தி ருந்தாலும் பாவமெல் லாம்பறந் தோடும்-அவள் பால்வடி யுமுகம் பார்த்தாலும் போதும்சௌ பாக்யம்வந் துவிளை யாடும்-திரு வாக்கால வள்மழை பெய்யென்றாற் பெய்யுமே வர்ணிக்க யாராலே கூடும்-கிட்டி வந்தது மக்குத்துரந்தர யோகம் வருத்தத்தை நீர்தள்ளிப் போடும்-இனிக் கருத்தி லவளையே நாடும்-நல்ல பொருத்தம்ஆ னந்தக்கூத் தாடும் |
| (பஞ்ச) 2 |
| வெள்ளியுந் தங்கமும் அள்ளிக்கொ டுத்தாலும் வேறொரு வர்முகம் பாராள்-நல்ல மேன்மைத்து ரைகளா னாலும் வீட்டு வேலைக்குப் பின்னிட்டுச் சோராள்-நிதந் தள்ளிநீர் வைத்தடித் தாலுங்கை நோகுமே சாமியென் றுதொழுஞ் சீராள்-பெற்ற தாய்தகப் பனழைத் தாலும்உம் மைவிட்டுச் சற்றும்பி ரிந்திட நேராள்-பழு தற்றந வமணி நேராள் நாளுங் குற்றமுள் ளோர்சபை சேராள்-செய்த நற்றவத் தாலன்றி வாராள் |
| (பஞ்ச) 3 |
| காரியம் பார்ப்பவள் கணக்குமெ ழுதுவள் காய்கறி யாக்கவுங் கெட்டி-அவள் கைபட்டால் வேம்புங்க ரும்பல்ல வோருசி கண்டுநீர் மண்டுவீர் சட்டி-அவள் ஊரிலே மாமியார் நாத்திமார் எல்லாம் உவந்திடு கற்கண்டுக் கட்டி-தினம் ஓயாவி ருந்துவந் தாலுஞ்ச லியாமல் |