பக்கம் எண் :

37

  பெண்மதிமாலை
  சகலமுந் தன்கண்ணாற் பார்ப்பாள்-வீட்டில்
அங்குமிருப் பாள்பின் னிங்குமிருப் பாள்-உம்
அண்டையிலுங் கட்டிக் காப்பாள்-உமக்
கற்பவ ருத்தமில் லாமற்க வலைகள்
அத்தனை யுந்தலை யேற்பாள்-திருச்
சித்தமென் னவென்று கேட்பாள்-மொழி
புத்தமு தைச்செவி வார்ப்பாள்-உம்மை
உத்தம மார்க்கத்தில் சேர்ப்பாள்
  (பஞ்ச) 7
  நீர்மகிழ்ந் தால்,அவள் தான்மகிழ் வாள்-துன்பம்
நீர்கொள்ளில், அவட்கும்வி சாரம்-அன்னம்
நீருண்ணில், அவள்பசி தீரும், இருவர்க்கும்
நிச்சய மேகச ரீரம்-இந்த
ஊரில்நீ ரில்லாத போதுறங் காள்அன்னம்
உண்ணாள்; பண் ணாளலங் காரம்-நீர்
ஊமைகு ருடரா னாலுஞ்செய் வாளுமக்
குரிமையாய் ராசோப சாரம்-ஆனால்
பரமாத ருடனீர் சஞ்சாரம் செய்யில்
வருமவ ளுடையநிட் டூரம்-அதற்
கொருநாளு மிலைபரி காரம்
  (பஞ்ச) 8
  பாவம்நீர் செய்யச்சொன் னாலுஞ் செய்யாள்-வேறே
பண்ணாளு மக்கப சாரம்-பெறும்
பாலர்க்கு நல்வழி காட்டித்தி னமும்
படிப்பிப்பாள் வேதாந்த சாரம்-வந்து
தாவு மெளியவர்க் கில்லையென் னாமலே
தாய்போற்செய் வாளுப காரம்-செல்வந்
தாழினும் ஏழைக்குத் தானுண்ணு மன்னத்தைத்
தந்து,மெ லியாள் சரீரம்-தம
யந்தியு மேநமஸ் காரஞ்செய் யும்