| 188 பெண்மதிமாலை |
| வருத்தம்நீர் படக்கண் டால்மனந் துடிப்போம்-கீத வண்ணங்கள் பாடிக் கொண்டுகால் பிடிப்போம்-பாட மாட்டோமோ மீட்டோமோ காட்டோமோ ஊட்டோமோ | வீணை நயங் சுகம் நல்ல | |
| (வித்தை) 1 |
| வரவுசெல வின்கணக் கெழுதிவைப்போம்-பல வகைவகை யுடுப்புக ளுமக்குத் தைப்போம் பரவும் பலதொழில் நீர்பண்ண வொப்போம்-நல்ல பக்ஷணங் கறிகளுஞ் செய்யத் தப்போம்-நாங்கள் | படியோமோ விடியோமோ முடியோமோ பிடியோமோ | இருள் மருள் அருள் நல்ல | |
| (வித்தை) 2 |
| வாணியும் நீரும் ஒரு கோத்திரமா-அவள் வரப்பிரசாதம் உமக்குமாத் திரமா வீணி லவட்கெங்கண் மேல்க்ஷாத் திரமா-நாங்கள் மெய்ஞ்ஞான மார்க்கத்துக் காகப்பாத் திரமா-உம்மை | வெல்லோமோ கல்லோமோ சொல்லோமோ இல்லோமோ | கல்வி கவி புத்தி நல்ல | |
| (வித்தை) 3 |
| கொஞ்சம்நீர் கோபம் செய்யில்,அஞ் சிடுவோம்-எங்கள் குற்றம் பொறுக்கச் சொல்லிக்கெஞ் சிடுவோம் தஞ்சம தாக உமைநம் பிடுவோம்-உம்மேல் சாகித்தியம் செய்து தினம்கும் பிடுவோம்-நாங்கள் | தாழ்ந்தோமே ஆழ்ந்தோமே சூழ்ந்தோமே வீழ்ந்தோமே | துயர் உம்மைச் காலில் நல்ல | |
| (வித்தை) 4 |