பக்கம் எண் :

116சமுதாய வீதி

     ‘‘கதாநாயகியாயிருக்கிற கழைக்கூத்திக்கு ‘‘கமலவல்லி’’ன்னு பேர்
வச்சிருக்கே; கதாநாயகன் கதாநாயகியைக் கூப்பிடற எல்லாக் கட்டத்திலியும்
‘‘கமலவல்லி!’’ ‘‘கமலவல்லி’’ன்னு முழுப்பெயரையும் நீட்டி இழுத்துக் சொல்லிக்
கூப்பிடறதாகவே வருது. ‘‘கமலா’’ன்னு கூப்பிடறதா மாத்தினா நல்லது.
கூப்பிடறதுக்கு அழகாகவும் சுருக்கமாவும் வாய் நெறையவும் இருக்கும்.’’

     ‘‘கூடாது! கமலவல்லீன்னுதான் கூப்பிடணும்.

     ‘‘ஏன்? ‘கமலா’ன்னுன்னு கூப்பிட்டா என்ன?’’

     ‘‘இது சரித்திர நாடகம்! ‘‘கமலவல்லீ’’ங்கிற பெயரைக் ‘‘கமலா’’ன்னு
சுருக்கிக் கூப்பிடறப்பவே ஒரு சமூக நாடகத் தன்மை வந்துடும்.’’

     ‘‘உனக்கு ஏன் புரியப் போகுது?’’ என்று முத்துக்குமரன் பதிலுக்கு
வினவியபோது கோபால் முகம் சிவந்தான். தான் எதிர்த்துப் பேசுவதை
அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன்
உணர்ந்தான். ஆயினும் ஒத்திகை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
முத்துக்குமரன் கோபாலுக்காக எதையும் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ
இல்லை. வசனத்திலும், நடிப்பிலும், ஒத்திகையிலும், தான் கூறுவதைக்
கண்டிப்பாக வற்புறுத்தினான் அவன். முதல் நாள் ஒத்திகையில் வேறு
அதிகமான தகராறுகள் எவையும் கோபாலுடன் முத்துக்குமரனுக்கு
ஏற்படவில்லை. மாதவியோ கோபாலுக்கு முன் புலியைக் கண்ட மான் போல்
பயந்து நடுங்கினாள். அவளையும் வைத்துக்கொண்டே கோபாலிடம்
கடுமையாகவோ அளவு மீறியோ பேசுவதற்கு முத்துக்குமரன் தயங்கினான்.
முந்திய தினத்தன்று இரவு கோபால் பையனிடம் எழுதிக் கொடுத்தனுப்பியிருந்த
கடிதம் நினைவு வந்து அவனை ஓரளவு தயங்கச் செய்தது. கோபால்
அசம்பாவிதமானவையும் அபத்தமானவையுமான கேள்விகளைக்
கேட்கும்போதெல்லாம் அவனைக்