|
|
பெயரை
நான் மாளும்படிச் செய்கிறேன். இதனால் நான
டைந்த பயனென்ன? இக்காரியத்தில் நான் கையிட்டுக்
கொண்டநாள் முதலாக ஒரு நிமிஷமேனும் எனக்கு
மன சஞ்சல மில்லாதிருந்த தில்லையே! எந்நேரமும்
எங்கு நாம் செய்யும் சூழ்ச்சிகள் தவறிவிடுகின்றனவோ,
எங்கு பிறர் அவைகளைக் கண்டுபிடித்து விடுகின்றனரோ,
எங்கு பத்மாவதியிடம் மறுபடியும் மகாராஜாவுக்கு
அன்பு பிறந்துவிடுகிறதோ என்னும் கவலை பாதித்
துக்கொண்டே யிருக்கிறதல்லவா? மனோஹரனைக்
காணும் பொழுதும், அவனைப் பற்றிக் கேட்கும்
பொழுதும் அவனது தீரத்தை நினைக்கும்பொழுதும்,
என் மனம் எவ்வாறு நடுநடுங்குகிறது! மனோஹரன்
பத்மாவதி குமாரனாகவும் விஜயாளுக்கு
மாரனாகவும் எனக்கு மாறனாகவும் உதித்திருக்கிறானே!
என்ன சங்கடங்கள்! எங்கு நோக்கினும் தொந்தரவு
தான்; நான் பத்மாவதியின் தோழியாய்ச் சேர நாட்டி
லிருந்து இங்கு வந்த பொழுதிருந்ததைவிட இப்பொழுது
நான் அதிகமாயனுபவிக்கும் சுகமென்ன? கவலை
யுற்ற கருடனாய் வாழ்வதினும் கவலை யற்ற காகமாய்
வாழ்வதே மேலாகும்! இத்தொல்லைகளை யெல்லாம்
விட்டு ஒருவரு மறியாதபடி எங்கேயாவது ஓடிப்போய்த்
தொல்லை யற்று என் வாழ்நாட்களைக் கழிக்கவா?
பத்மாவதி தன் கணவனுடன் முன்பு போல சுகமாய் வாழட்
டுமே, இவர்களைப் பிரித்த பாவம் இன்னும் எனக்
கெதற்கு? சீ!. என்ன வாழ்வு-
ஓர்
தோழி வருகிறாள்.
யார் அது? என்ன சமாசாரம்? நான் அழையாதிருக்கும்
பொழுது என்னிடம் வரவேண்டாமென்று எத்தனை
முறை உன்னிடங் கூறியிருக்கிறேன்?
|
| தோ.
|
ஆம், உண்மைதான், ஆயினும் பௌத்தாயனர் சீக்கிரம்
உம்முடன் ஒரு சேதி கூறிவரும்படி யனுப்பினார்.
|
|
|
|