பக்கம் எண் :

காட்சி-2]மனோஹரன்9

பௌ. அம்மணி! அது அசாத்தியமான காரியம் எவ்வளவோ
இவ்விஷயங்களிற் கைதேர்ந்த அந்த இரண்டு வீரர்களால்
ஆகாமற்போன காரியம் என்னாலாகப்போகிறதா?
அவனைக் கொல்வது தவிர வேறேதாவது கட்டளையிடும்
செய்கிறேன்.

வனை. ஆனால்- உடனே புறப்பட்டுப்போய் அவனிடத்திலிருக்கிற
உடைவாளை எப்படியாவது அபகரித்து வந்துவிடும்.
பிறகு செய்யவேண்டியவற்றை அப்புறம் கூறுகிறேன்.
மனோஹரன் இங்கு வருமுன் அவனது உடைவாளுடன்
நீர் வந்து சேரவேண்டும். இதாவது செய்வீரா?

பௌ. இது சாத்தியமான காரியம். இதோ புறப்படுகிறேன்.
அம்மணி, தங்கள் தயவிருக்கவேண்டும். இப்பிரயத்னத்தில்
எனதுயிர் போனாலும் போகும். ஆயினும் உமக்காகத்
துணிகிறேன். ஞாபக மிருக்கவேண்டும்.

வனை.

நீர் ஒன்றும் அஞ்சவேண்டாம். புறப்படும் சீக்கிரம்.
எனக்குதவி செய்தவர்களை நான் ஒருகாலும் மறக்க
மாட்டேன்.
             [தூரத்தில் ஒரு கூச்சல் கேட்கிறது.]

பௌத்தாயனரே! அதென்ன சப்தம்?

பௌ. நான் சென்று கேட்டுவரவா விரைவில்?

வனை. வேண்டாம். போகும்போது என்னவென்று விசாரித்து
யாரிடமாவதுகூறி இங்கனுப்பிவிட்டு, நீர் நேராக உம்
முடைய வேலையை நோக்கிச் செல்லும். ஒரு க்ஷணப்
பொழுதும் இனித்தாமதிப்பின் நம்முடைய காரியம்
சித்தி பெறாது, புறப்படும்.

பௌ. ராஜமகிஷி, நான் பெரிய குடும்பமுடையவன், நான் இறப்
பேனாயின் என் குடும்பத்தைத் தாம் தான் காப்பாற்ற
வேண்டும்.-

வனை. ஒன்றும் அஞ்சாதீர் நீர்போம். [பௌத்தாயனன் போகிறான்.]
ஐயோ பாவம்! மறுபடியும் இவனை நான் உயிருடன்
காண்பது அசாத்யம்! எனக்காக வீணில் எத்தனை