| பு. | [குரலை மாற்றி ] நான் ராஜாவினால் அனுப்பப்பட்ட சேவ கன். அவர் முன்பு இட்ட கட்டளையை மீட்டுக்கொண்ட தாகக் கூறி, இளவரசர் இறவாதிருக்கும்படி தடுத்து, இவ்வோலையையும், தன் அடையாளமாக இக்கணையாழி யையும் கொடுக்கச் சொன்னார்.
|
| ச. | அரசே ! இது மஹாராஜாவின் முத்திரை மோதிரந்தான் சந்தேகமில்லை. இவ்வோலையிலென்ன எழுதியிருக்கிறது பார்ப்போம் ; இருளில் ஒன்றும் தெரியவில்லை ! அரசே ! எப்படியாவது தெய்வாதீனத்தால் நீர் உயிர்பிழைத்தீரே ! ராஜப்பிரியன் வருகிறான்.
|
| ரா. | யார் அங்கே?
|
| ம. | யார் அங்கே? ஓர் பந்தத்தை யெடுத்துக்கொண்டு வரு கிறான். ராஜப்பிரியனா?
|
| ரா. | அரசே, எம்மை உயிருடன் காணப்பெற்றேனே ! - இது என்ன சத்தியசீலரே? [புருஷோத்தமராஜன் மறைந்து விடுகிறார். ]
|
| ச. | ராஜப்பிரியரே ! கொடும் அப்பந்தத்தை இப்படி ! அப் புறம் எல்லாம் சொல்லுகிறேன். [ படிக்கிறார். ] "மந்திரி சத்தியசீலருக்கு, முன்பு யாம் உமக்கிட்ட கட்டளையை மீட்டுக்கொண்டோம். மனோஹரனைத்தாம் கொல்லவேண் டியதில்லை. புருஷோத்தம சோழன்"-அரசே சிரஞ்சீவி யாக வாழ்வீராக !
|
| ரா. | ஆம் ! ஆம் !
|
| ம. | ராஜப்பிரியா, உனக் கென்ன பயித்தியம் பிடித்துவிட் டதா என்ன? என்ன குதிக்கிறாய் ! பந்தத்தை யவித்து விட்டனையே !
|
| ரா. | இனி அதற்கு வேலை யில்லை. உமதுடலிருக்கு மிடத் தைக் கண்டு நானும் உயிர் விடலாமென்று தேடக் கொண்டுவந்த பந்தம், நீர் உயிர் பெற்றதைக் கண்டபின் எதற் குபயோகம்?
|