| ச.
|
அரசே,
நான் வாளை வீசி யுமது சென்னியை வாங்கும்
பொழுது நீரும் உமது வாளை வீசி எனது கந்தரத்தையும்
வெட்டுவதாக வரமளியும் !
|
| ம.
|
என்ன !
நான்தான் இறக்கவேண்டும், என் விதி ! உமக்
கென்ன? நானாவது உம்மைக் கொல்வதாவது ! ஒரு
காலும் மாட்டேன்.
|
| ச.
|
அரசே,
தாம் எனக்கு வரமளித்தபின் பின்வாங்குவது
நியாயமன்று ; நீர் இறந்தபின் உம்மைக் கொன்ற கொடும்
பாவியாகிய நானோ உயிர் வாழ்ந்திருப்பேன்? அப்படி
யிறப்பவன், தம்முடைய கரத்தால் இறப்பேனாயின் என் ஜன்மம்
புனிதமாகும், அவ்வளவே நான் வேண்டிக்கொள்வது.
அரசே ! உமக்காக நான் சிறுவயதுமுதல் பாடுபட்டதற்காக
தாம் இவ்வளவு செய்யலாகாதா?
|
| ம.
|
[கட்டி
யணைத்து ] சத்தியசீலரே ! மெச்சினேன் உமது
பேரன்பை ! உம்மைக்கொல்ல எனக்குச் சிறிதும் மனமில்லை ;
ஆயினும் நீர் வேண்டுவதை மறுக்கலாகாதென
விடன்பட்டேன். எடும் வாளை !
|
| ச.
|
அரசே,
நாமிருவரும் நமது கோரிக்கையைக் கூறி யிறப்போம்.
உமது நிச்சயமென்ன?
|
| ம.
|
[வாளை
வீசி] என்னைப்பெற்ற தாய்தந்தையரன்றி எனக்குப்
பிறிதொரு தெய்வமில்லை ! சுத்த வீரமே என்றும்
நிலைத்திருக்குமாக !
|
| ச.
|
[வாளைவீசி]
பிறருடைய நன்மைக்காக வாழ்வதே மாந்தர் கடமை ! சத்தியமே என்றும் நிலைபெற்றிருக்குமாக !
[ இருவரும் வாளை ஓங்குகிறார்கள். ]
மறைந்திருந்த புருஷோத்தமராஜன் வேகமாய்
வெளியே வருகிறார்.
|
| பு.
|
[இருவருக்கும்
இடையில் நின்று ] பொறும் ! பொறும் !
|
இருவரும்.
யார் அது?
|