| ச.
|
எங்கே
இதைக் கொண்டுவந்த சேவகன்?- எங்கும்
காணோம், எங்கேயோ போய்விட்டான் !
|
| ம.
|
ராஜப்பிரியா,
மஹாராஜா ஏன் இவ்வாறு தன் கட்ட
ளையை மீட்டுக்கொண்டா ரென்று எனக்கு வருத்த
மாகவே யிருக்கிறது ! நான் இறப்பதே நலம் ! நானினி
உயிர் வாழ்வானேன்?
|
| ரா.
|
இதென்ன
அரசே மறுபடியும்?
|
| ம.
|
நான்
ஒரு காலும் இப்பட்டணத்துட் பிரவேசியேன் இனி.
|
| ரா.
|
வேண்டாம் ;
வாரும், நாம் மூவரும் இப்படியே புறப்
பட்டு மாறுவேடம் பூண்டு தேசசஞ்சாரம் செய்வோம்
சிலகாலம் ; என்ன சொல்லுகிறீர்களிதற்கு !
|
| ச.
|
ஆம்,
அரசே ; இதுவே நல்ல யோசனை.
[மூவரும்
போகிறார்கள். ]
காட்சி
முடிகிறது.
ஆறாம்
காட்சி.
இடம் : - பத்மாவதியின் அறை. காலம்-இரவு.
பத்மாவதியும்
விஜயாளும் வருகிறார்கள்.
|
| வி.
|
மாமி,
நான் சொல்வதை நம்புங்கள். என் பிராண
நாதர் உயிரோடுதா னிருக்கிறார் ; இறக்கவில்லை. தாம்
ஒன்றும் அவசரப்பட்டுச் செய்துவிட லாகாது. அக்
கினிப் பிரவேச மாவதற்குச் சித்தஞ் செய்து வைத்தி
ருந்த தீயை அவித்துவிடும்படி கட்டளை யிட்டுவிட்டு
வந்தேன். தாம் இனி ஒன்றுக்கும் வருத்தப்பட
வேண்டாம்.
|
| ப.
|
விஜயா,
நீ சொல்வதொன்றும் எனக்கு நன்றாக விளங்க
வில்லை. மனோஹரன் இறக்கவில்லை யென்று உனக்
கெப்படி உறுதியாய்த் தெரியும்?
|