பக்கம் எண் :

102மனோஹரன்[அங்கம்-3

வி. மாமி, எல்லாம் எனக்கு நன்றாய்த் தெரியும் ;  என்
னிடந்தா னிப்பொழுது இறப்பதில்லை யென்று வாக்
களித்தாரே, இதினின்றும் தவறுவாரோ?

ப. இதைக்கொண்டோ இறக்க வில்லையென்று கூறிவிட்
டாய்?

வி. இல்லை மாமி, உட்காருங்கள். இறந்திருந்தால் அவ
ருடைய உடலெங்கே? நீங்கள்தான் கொத்தளங்களிற்
போய்ப் பார்த்தீரே, அகப்பட்டதா?

ப. ஆம்,-சத்தியசீலரைக் கேட்கலாமோ வென்றால் அவரை
யுங் காணோம்.

வி. ராஜப்பிரியரையுங் காணோம்.-மாமி இவர்கள் மூவரும்
எங்கேயோ போய்விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நீர் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம்.

ப. மனோஹரன் இவ்வளவு காரியமெல்லாம் நடந்த பிறகு
எப்படி உயிர்பிழைத் திருப்பான்? ஆயினும் இம் மூவர்
களையுங் காணாதிருப்பது சந்தேகத்திற்கு இடங்கொடுக்
கிறது.  [தனக்குள் ]  விஜயாளைக் கேட்பதில் பிரயோஜன
மில்லை, அவளுக்கு ஒன்றும் தெரியாது.

              நீலவேணி வருகிறார்.

நீ. அம்மா, மஹாராஜா வாயில் வந்திருக்கிறார் !  தம்மைப்
பார்ப்பதற்காக உள்ளே வரலாமா வென்று கேட்டுக்
கொண்டு வரச்சொன்னார் ! 

ப. யார்? மஹாராஜாவா?

நீ. ஆம் அம்மா, உண்மையாகத்தான். அம்மணி, இனி 'நீங்
களும் அவரும் ஒருமித்த மனமுடையவராய்ச் சுகமாக
வாழ்வீர்களாக !  ஏதோ மஹாராஜாவினுடைய மனம்
திரும்பி யிருக்கின்றதென்பதற்குத் தடையில்லை?

ப. மஹாராஜா என்னை இங்குப் பார்ப்பதாவது ! 

நீ. ஆம், அம்மணி, நான் அவரை உள்ளே வரச்சொல்லவா?