பக்கம் எண் :

104மனோஹரன்[அங்கம்-3

வி. என்ன மாமி? ஒரு வேளை பிராணநாதர் சமாசாரம்
தான் ஏதாவது சொல்ல வந்திருக்கிறாரோ என்னவோ?
உள்ளே வரவழைத்துக் கேட்கிறதுதானே? தம்முடைய
புருஷனைத் தாம் பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது?

ப. விஜயா, நீ ஒன்றும் அறியாதவள் ;  இவ் விஷயங்களி
லெல்லாம் தலை நுழைத்துக்கொள்ளாதே-

         மறுபடியும் நீலவேணி வருகிறாள்.

நீ. அம்மா !  தாம் கூறியதைச் சொன்னேன். அவர் உட
னே யிருந்த விடத்திலேயே உட்கார்ந்துகொண்டு, உன்
தலைவியினிடம்போய் என்னைப் பாராவிட்டால் இன்று
இப்படியே இந்த விடத்தை விட்டுப் பெயராது உயிரை
விடச் சித்தமாயிருக்கிறேனென்று சொல்லி வா, என்றார்.

ப. இதென்ன சங்கடமா யிருக்கிறது? நீலவேணி இத்
திரையைத் தள்ளிவிடு. இதற்கப்புற மிருந்து என்
னுடன் பேசுவதானால் வரச்சொல், போ.
                      [ நீலவேணி போகிறாள். ] 

என்ன ஆச்சரியம் !  ஏது மஹாராஜா இப்படி கூறும்
படி நேரிட்டது? என்பொருட்டு அவ்வளவு மன உருக்
கம் வந்து விட்டதோ? என்ன என்னுடன் பேச வந்
திருக்கிறார்? ஏதோ அவருடைய மனம் திரும்பியிருக்
கிற தென்பதற்குச் சந்தேகமில்லை- ஆயினும் இனி
திரும்பி என்ன, திரும்பாமல் என்ன ! 

       புருஷோத்தமராஜன் திரைக்கு ஒரு புறமாக வந்து நிற்கிறார்.

பு. ஆம் ! ஆம் !  மஹா பாதகனாகிய நான் உன்னைக் கண்
ணெடுத்தும் பார்க்கத் தக்கவனல்லன் !  பத்மாவதி-
பெயரிட்டாவது உன்னை நான் அழைக்க லாகாதோ?

ப. விஜயா, எதற்காக வந்திருக்கிறார் என்று கேள்?

வி. மாமா-