பக்கம் எண் :

காட்சி-6]மனோஹரன்105

ப. ஸ் !  மஹாராஜா என்று அழை, அவர்தான் உனது
மாமனார் அல்லவென்று சபையறியச் சொல்லிவிட்டாரே ! 

வி. மஹாராஜா-தாங்கள் எதற்காக வந்தீர்களென்று கேட்
கச் சொல்லுகிறார்கள்?

பு. வேண்டும் ! வேண்டும் !  எனக்கு இந்தத் தண்டனையும்
வேண்டும் !  அதிகமும் வேண்டும் !  நான் செய்த தப்பிதத்
திற்கெல்லாம் இதுவும் போதாது !  ஆயினும்-பத்மா
வதி !  என்னை நேரிற் பாராவிட்டாலும் ஒரு வார்த்தை
யுங் கூறலாகாதா? நான் அவ்வளவு இழிந்தவனாய்விட்
டேனோ?

ப. இதெல்லாம் இப்பொழு தென்னத்திற்கு? வந்த சேதி
யைச் சொல்லும்படி கேள்-விஜயா.

பு. பத்மாவதி நீ அக்னிப் பிரவேசமாகச் சித்தஞ் செய்து
கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தடுக்க வந்தேன்.

ப. ஏது? மஹாராஜாவுக்கு-வேசையாகிய-என்மீது இந்
தப் பதினாறு வருஷங்களாக இல்லாதபட்சம் இப்போது
வந்தது?-கேள் விஜயா.

பு. ஐயோ !  பத்மாவதி !  இன்னொருமுறை இதைக் கூறு
வையாயின், அதை நேற்றைத்தினம் கூறியதற்காக என்
நாவை உன் முன்னிலையிலேயே அறுத்தெறிவேன் ! 
ஐயோ !  நானிதற்காக இதுவரையிற் பட்டதுயரமெல்
லாம் போதாதோ? நீயும் என்னை வருத்தவேண்டுமோ?
பத்மாவதி !  பத்மாவதி !  இந்தப் பதினாறு வருஷங்களும்
உனக்குத் துரோகியாக இருந்த நான் செய்ததெல்லாம்
தவறு ! தவறு !  ஒப்புக்கொண்டேன் !  உத்தம பத்தினி
யாகிய உன்னைத் தூஷித்த தெல்லாம் தப்பிதம் !  தப்பி
தம் !  இப் பாதகன் உனது மகிமையை யறியாது செய்த
தெல்லாம் தவறென ஏற்றுகொள்ளுகிறான் !  நான் உனது
கரத்தைப் பற்றிய கணவனாயிற்றே என்றாயினும் சற்றி
       14